எல்லைச் சாமி

ஊருக்குள் புகுந்து ....
பல வீட்டில்
கொள்ளையிட்ட திருடன் ...
பயந்துகொண்டே
ஓடிவந்தான்...
ஊர் எல்லையை நோக்கி...

எல்லையில் இருந்த
சாமிகளைப் பார்த்ததும்தான்
உயிரே வந்தது ...

தப்பித்து
ஊர் எல்லைக்கே
வந்துவிட்டோம்...

இனி பயமில்லையென்று.

எழுதியவர் : PASALI (21-Jun-21, 7:03 am)
சேர்த்தது : PASALI
Tanglish : ellaich saami
பார்வை : 56

மேலே