பெண்மை

பெண்ணின் மடல்
இந்த பொழுதில் எந்த கவலையும் இல்லை
எந்த தேவையும் இல்லை
எந்த நிலையிலும் உடையும் அளவில்
மனதில் கோழைத்தனம் இல்லை
கண்களை துடைத்துக் கொண்டே
அடுத்த வேலைக்கு தயார் என
காலங்கள் கழித்து மீண்டும்
மீண்டும் எழுந்து நின்று கொண்டே
இருப்பினும்....



பெண்மையை பூர்த்தி செய்ய
முடியாத தருணம்
பேச்சுகள் சுட்டெரிக்கும் தருணம்
வலிமை காணாமல் போகும் தருணம்
குழப்பமான நிலையில் இருக்கும் தருணம்
கண்ணீரை சுமந்து தலை குனிந்தவளாய் வலிகளில் கொடிய
வலி

எழுதியவர் : உமாமணி (21-Jun-21, 11:08 pm)
சேர்த்தது : உமா
Tanglish : penmai
பார்வை : 176

மேலே