392

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சரியான முன் உதாரணமாக இல்லை.......
பிள்ளைகளிடம் எதிர்காலம் பற்றிய சீரிய சிந்தனை இல்லை......
ஆசிசிரியர்கள் நல்ல ஒழுக்கங்களை போதிக்கவில்லை.......
அதிகாரிகளிடம் கடமை உணர்வுகள் இல்லை......
அரசியல்வாதிகளிடம் சமூக சிந்தனை இல்லை.......
அரசு திட்டங்களில் தொலைநோக்குப் பார்வை இல்லை........
இப்படி இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தால் எதுவும் மாறப் போவதில்லை.......
ஒரு சிறு தீபம் அறையின் இருளை போக்குவது போல் ......
நம்மால் இயன்றவரை நம்மைச் சுற்றியுள்ள இருளைப் போக்க ஒரு தீபம் ஏற்றுவோம்.....
ஒவ்வொருவரும் ஏற்றும் இச் சிறு தீபத்தால்......
பாரதமே ஒளி பெற்று மிளிரும் ......
பாருலகம் நம் வழி தொடரும்.....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (3-Jul-21, 8:56 pm)
பார்வை : 37

மேலே