நிற்பன பறப்பன

குருவி குழி நீரில்
நீராடலாம்
குருவி குற்றாலத்தில் போய்
குளிக்க முடியுமா ?

எருமை குட்டையில்
நின்றல்
நிட்டையில் இருப்பதாக பொருளில்லை ?

குயிலின் கருமை நிறந்தான்
காக்கை
குயில் போல் பாடிட முடியுமா ?

கீ கீ என்று கீச்சிடும்
கிளி பேசவும் செய்யும்
அழகிலோ கிளியோ பாத்ரா !


மயில்போல் அழகிய தோகை இல்லை
வான் கோழிக்கு
ஆடினால் அசத்திவிடும் !


கனைப்பதிலும் உதைப்பதிலும்
வல்லமை உள்ள கழுதைக்கு
பொதிசுமப்பதில் பொறுமையோ பொறுமை ?


வாலும் உண்டு தாவுதலிலும் வல்ல
குரங்கு
மனிதனின் மாஜி வடிவம் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-21, 7:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே