நள்ளிரவு மழை

இப்போது மழை.

இந்த
நள்ளிரவில் மழை.

இதை வெறும் தூறல்
என்று கடக்க
மனமின்றி பார்க்கிறேன்.

தெருவில் யாருமில்லை.

ஊர் துயிலில்
லயித்து இருக்கிறது.

எனக்காக என்னிடம்
வானம் பேசுகிறது
என்று நினைக்கிறேன்.

நினைவில்
சாரல் தெளிக்கும் மழை
என்னைப்பார்த்து
புன்னகை செய்கிறது.

மழை
நின்று விடுமுன்
அதன் சப்தத்தில்
கரைந்து நான்
தூங்க கண் மூடுகிறேன்.

மழை ஓசையில்
மண்டிக்கிடக்கும்
என் உயிருக்குள்...

நில்லாது
பெய்து கொண்டிருக்கும்
அவள் நினைவை
யாசகமாய் கேட்கும்
இந்த இரவின் பசிக்கு
அதைத்தவிர வேறு
என்ன நான் தர?

=================÷÷÷÷============

எழுதியவர் : ஸ்பரிசன் (15-Jul-21, 12:30 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : nalliravu mazhai
பார்வை : 1014

மேலே