இராட்சசியே

தொட்டு விட்டாள்
இதயமதை
அழகிய ஊஞ்சலாம்
அவன் இதயமதில்
ஒய்யாரமாய் அவள் .
எப்போதும் கொள்ளாத
எண்ணங்கள் அவன்
மனதில்
கனிந்தே திகைக்கிறது.
அவளுக்கென்ன அழகிய
தேவதையாச்சே/,
அகற்றவும் முடியாத
திணறலுடன் அவன்,
ஆண் பாவம் பொல்லாதது
புரியாதோ அவளுக்கு ,
அவனாலும் அவளை
அகற்றிட முடியாது
ஏன்/ அவனுக்கும் நெஞ்சில்
ஈரமும், வீரமும் உண்டே
இருந்தும் அவள்
அழகில் ஒரு இராட்சசியே

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Jul-21, 12:00 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 168

மேலே