பொன் வெள்ளி விட மண்தட்டே சிறந்தது

நேரிசை வெண்பா

வாழைவெள்ளைப் பன்னநன்றா மற்றிலைகண் மத்திமமா
மாலைவெள்ளி வெண்கல மும்நன்றாங் கோழை
கயபாண்ட நோய்போங் கருதியிவைக் கெல்லாங்
குயபாண்ட மேலசனங் கொள்

ழை க்கு லை இடையின எதுகை என்பர்

மனோரஞ்சக போசனத்திற்கு வெள்வாழை யிலையே நன்று. மற்ற இலைகள்
மத்திபமாம். தங்கம் வெள்ளி வெண்கலம் இவைகளால் செய்த உண் கலங்கள்
மிகவும் நல்லதாம். அயப் பாண்டத்தில் புசிக்கல கோழை நோய் போகும்
இவற்றிறெல்லாம் விட குயவன் செய் மண்பாண்டத்தில் புசிக்க பாண்டு ஷயம்
ரோகத்தார் பிறந்த நீர் சுரப்புகள் நீங்குமாம்.

அசனம் =போசனம்
............

எழுதியவர் : சேர்த்தவர் பழனி ராஜன் (8-Aug-21, 10:41 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே