சிறையிட்டேன்
சிறையிட்டேன்.
மதிமயங்கி நான்,
மனதில் ஓர் வட்டமிட்டு,
அன்னை அவளை
சிறையிட்டேன்,
என்ன பாவம் செய்து விட்டேன்.
அகிலம் ஆளும் அன்னையை,
அகிலத்தோர் தேடும் அன்னையை,
சிந்திக்காமலே
சிறைப்பிடித்தேன்,
மன்னிப்பாளோ! அவள்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.