செஞ்சம்பா அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செஞ்சம்பாத் தண்டுலத்தால் தீராச் சிறுசிரங்கும்
விஞ்சுபுண்ணும் வன்சொறியும் மெய்க்கணியாம் - விஞ்சும்
அதிகபசி தானே அணங்கரசே யிந்தப்
பதியதனில் நாளும் பகர்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் சிறிய கிரந்தி, அதிகவிரணம், யானைச் சொறி, மிகுந்த பசி இவையுண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-21, 10:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே