செஞ்சம்பா அரிசி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
செஞ்சம்பாத் தண்டுலத்தால் தீராச் சிறுசிரங்கும்
விஞ்சுபுண்ணும் வன்சொறியும் மெய்க்கணியாம் - விஞ்சும்
அதிகபசி தானே அணங்கரசே யிந்தப்
பதியதனில் நாளும் பகர்
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் சிறிய கிரந்தி, அதிகவிரணம், யானைச் சொறி, மிகுந்த பசி இவையுண்டாகும்