கல்லுண்டைச் சம்பா அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கல்லுண்டைச் சம்பாவைக் கண்டருந்தி நின்றவர்முன்
மல்லுண்ட பேர்எதிர்க்க வாய்க்குமோ - வில்உண்டை
போலுரையாம் நல்ல புசபலமாம் இன்சுவையாம்
பாலனைய மென்மொழியே பார்

- பதார்த்த குண சிந்தாமணி

கல்லுண்டை சம்பாவரிசியை உண்பவர்க்கு மிகுந்த பலமுண்டாகும்; இனிய சுவையுடைய இது தோள் பலத்தையும் உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-21, 10:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே