ஊசிமல்லிகை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)
மாந்த கணம்பொருமல் வாராது மைந்த(ர்)களுக்
கூ’ர்’ந்தேயி ரத்தகணம் ஓடுங்காண் – கூந்த(ன்)முடி
மானே சுரந்தணியும் வாங்காத வீக்கம்போங்
கானூசி மல்லிகைக்குக் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
இம்மல்லி கணமாந்தம், வயிற்றுப்பிசம், குழந்தைகட்கு ஏற்படும் இரத்த நோய்கள், சுரம், சோகை ஆகியவற்றை நீக்கும்