வீரமாமுனியும் அவரின் கிருத்துவத் தொண்டும்

முனி என்பவன் யார்? முனி என்பது தமிழ்ச்சொல் அகத்தியன் மாமுனி சப்தமுனி
அல்லது சப்த ரிஷி என்பார்கள் .வீரமாமுனிவர்க்கு முனி என்ற பட்டம் பொருந்துமா
நீங்களே பாருங்கள் கேளுங்கள். முனி என்பவன் யார் விளக்கம் கீழே படியுங்கள்

கலி விருத்தம

சமாதி யுணர்ந்தக்கால் தக்கரிஷி என்பார்.
பெமாதி குளிகைசெய்தா டினவனே சித்தன்
புமாதித்த மூச்சையடக் கினோன்யோகி யாவான்
அமாதித்த இம்மூன்றும் அறிந்தோனே ஞானியாமே .......... திருமூலர்
.
1)மூச்சை வாங்குவது மூச்சை விடுவது நீக்கி இருப்பதே சமாதி இதன்படி வாழ்பவனே ரிஷி

2)வாலை ரசமணி 12 சந்தான, சகட , சொரூப , கவன, கமலினி , குளிகை யெனப்பலதும் செய்து
கண்டம் விட்டு கண்டம் பறப்பது செய்து வருபவன் சித்தன்.3) எப்பொழுதுமே மூச்சை அடக்கித்
திரிபவன் யோகி என்றும் இந்த மூன்றையும்கணக்காய் செய்து முடித்தவனே
ஞானி அல்லது முனி என்றழைக்கப் படுவர்.. இதில் எந்த ரகத்தினை சேர்ந்தவர் இந்த
வீரமாமுனிவர் என்பவர் கேப்பையில் நெய்வழிகிறதென்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே
போனது என்று கேள்வி கேட்பவனாயிற்றே தமிழன். இது வேண்டுமென்றே மறைக்கப்பட்டு
பாதிரியை உயர்த்தி இருக்கிறார்கள். மேலும் இதை வளர்த்துக் கொண்டே போவது
சரியில்லை.

வீரமாமுனி என்பவர் இந்துவல்ல தமிழனும் அல்ல அப்படிப்பட்ட அவருக்கு யார் முனிவர்
பட்டம் சூட்டினரோ தெரியாது. ஒருவேளை கழ்கத்தார் போல அவரே வைத்துக்கொண்டாரோ
தெரியாது. வீரமா முனி எப்படித் தமிழனாக முடியும். ? அவர் கிருத்துவரை புகழ் பாட வந்த
கிருத்துவப் பாதிரி.இந்துக்களையும் தமிழர்களையும் கிருத்துவராக்க வந்த கெடு மதிகொண்ட
அந்நியன்...


இரு விகற்ப குறள் வெண்பா

தக்கவரை யேற்றா தறிவீலி யேத்தியே
சொக்குந்த மிழ்நல் லுலகு



வீரமா முனி என்னும் கான்ஸ்டன்டைன் இந்தியாவிற்கு ஏன் வந்தார் ? ஏன் தமிழைக் கற்றார்
கொல்லன் தெருவில் ஊசி விற்க முடியாது - இவர் சதேகத்திற்கு அப்பாற் பட்டவரில்லை.
! இவர் கற்றது என்ன ? யாரிடம் கற்றார் ? என்ன #இலக்கியம் படைத்தார் ?
அந்த இலக்கியம் தமிழருக்கு தந்த நன்மை யென்ன ? தமிழரிடம் என்ன பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளது ? அவருடைய படைப்பை யார்சரி பார்த்தது. மதுரைத் தமிழ் சங்கமா ?

ஒரே வரியில் சொல்லிவிடலாம். இன்று மாணவர்கள் M. Phill -- PhD களை விலை
கொடுத்து வாங்குவது போன்ற வேலைகளை அன்றே செய்தவர்தான் இந்த பெஸ்கி.

இன்று பிறப்பிலே தமிழனாய் பிறந்து கல்லூரித தமிழ் பேராசரியராய் பணியாற்றும் நபரிடம்
ஐயா இந்த வெண்பாவையும் கலித்துறையையும் சரி பார்த்து சொல்லுங்கள் என்றால் என்ன
சொல்வார் .? கொடுத்துவிட்டுப் போங்கள் சரிபார்த்து நாளைத் தருகிறேன் என்பார். இல்லையென்
றால் நான் இலக்கணம் படிக்கவில்லை இலக்கிய வரலாறு படித்தேன் அல்லது பாடநூல்கள்
படித்தேன் என்பார். ஒரு பாட்டை பார்த்தவுடன் இது வெண்பாவா, இன்னிசை வெண்பாவா
அகவற்ப்பாவா அருட்பாவா வெளிவிருத்தமா ஆசிரிய அல்லது கலிவிருத்தமா, தாழிசையா
கொச்சகமா, அடிமண்டிலமா, அடிமறி மண்டிலமா, அகவலா, தூங்கலா, செப்பலா என்று
கணிக்க யாப்பு கற்று பாடல் எழுதிப் பழக்கப் பட்டவரன்றி மற்றவர்களால் இயலாது..

வீரமா முனி @ பெஸ்கி வந்த நோக்கமே இந்தியரை கிருத்துவராக்கி மதம் மாற்றி
இந்தியாவை என்றும் தாங்களே ஆள வேண்டும் என்ற நோக்கில் என்பதை யாரும்
மறுக்கமுடியுமா ? இவர் வெள்ளையர்களால் அனுப்பப்ட்ட கிருஸ்துவ பாதிரி என்பதை
யாரும் மறக்கக் கூடாது. பச்சோந்தி தமிழர் இவருக்கு எல்லாவற்றையும் கற்றுத்தநது
நூல்களை பணத்திற்காக எழுதித்தந்து இவருக்கு பெருமை சேர்த்தனர் இவர் எழுதிய
தேம்பாவணி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று போலாம். என்ன கொடுமையிது ?

உ.வே. சாமிநாத ஐயர் ஐம்பெருங் காப்பியங்களில் சீவக சிந்தாமணிஒன்றாம். காதலில்
தூக்கிச் சாப்பிடும் பல பாடல்களை உள்ளடக்கியதும் காடுகள் வைத்தியம் மிருக வரலாறு
மிருக வைத்தியம் என்று பலபிரிவையும் கொண்ட மறைந்து போன சீவக சிந்தாமணிி நூலை
தேடி திருத்தம் செய்து கெட்டத் தமிழ் உலகிற்கு ஒப்படைத்தார். ஆது மட்டுமல்ல
எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களையும் இவர்தேடலில் கண்டு பிடித்த நூல்களாம். அவரும்
கண்டுபிடித்து தமிழுலகிடம் ஒப்படைத்தார் . இல்லாவிட்டால தமிழில் நான்கு காப்பியமே
இருந்திருக்கும். எட்டுத்தொகை பத்து்பாட்டும் யாருக்கும் தெரிந்திருக்காது.. நடந்து கொண்டே
கவிபாடுவதில் வல்லவர் உ.வே.சாமி நாத ஐயர் உ.வே. சா விற்கு இணையாக தமிழிற்குப்
பாடு பாட்டவர்களில் , யாருமில்லை.

திருவிக தமிழ்த் தொண்டு மாபெரும் தொண்டில்லையா? இன்று எழுதும் அணைந்து தமிழ்
எழுத்துக்களின் வடிவத்தில் மூக்கு வைத்து வடிவமைத்து அழகு செய்த்வர்யாரு ? திரு வி. .
கல்யாண சுந்தரனார் அல்லவா.?

பெஸ்கி மறைந்த தமிழ் நூலகளில் எதைக் கண்டு பிடித்து தமிழருக்கு கொடுத்தார். மாறாக
தமிழ் அறிஞர்களின் பெயரைத் தாழ்த்திட நேர்ந்தது இவரால்தான். தமிழருக்கு என்ன செய்தார்
பெஸ்கி ? தமிழனுக்கு என்ன லாபம் ? தமிழன் போல திருநீர் பட்டை யடித்துக் கொண்டாரா
இவரும் ? இல்லையே !!! தமிழர்போல சிவனையும் முருகனையும் தொழுத்தாரா ? இல்லையே!!!
தனக்கு தெரிந்த மொத்தத் தமிழனை யெல்லாம் அயல் நாட்டு மேரியை இயேசுவை அல்லவா
கும்பிடச் செய்த பாவியாம் . தமிழர் கடவுளை மறக்கச் செய்த்தது மாபெரும் துரோகச்
செயலில்லையா ?

முட்டாள் தமிழர்கள் துரோகிகளை மட்டும் தான் பாராட்டுவார்கள் . யோசிக்கவும் மாட்டான்.
தங்கள் இனம் அழிவது கண்டுகொள்ள மாட்டான் தமிழை கிருத்தவ்ரிடம் அடமானம் வைத்து
பசப்பு கிறான் பாருங்கள். இனியும் பெஸ்கியை தமிழன் பாராட்டுவானே யானால் அவன்
மானங் கெட்ட வனே. !!!

தனது அச்சுக் கூடத்தில் விடுதலை எழுத்தில் பழைய லை தேய்த்து விட்டது என்று புதிதாக
இதுதான் லை என்று பெரியார் போட்டார் அதனால் பெரியாரை தமிழறிஞர் என்று நாம்
அழைத்தால் அவருக்கு பெருமை நமக்கு அவமான்ம். காரணம் பெரியாருக்கு தமிழில்
வெங்காயம் தான் தெரியும். தமிழைக் கொன்றதில் பெரும் பங்கு பெரியாருடையது

நமது தமிழரில் பலரும் முட்டாள்களே. ஜெயலலிதா படித்தது பத்தாம் வகுப்பு. அவரென்ன
ஆங்கிலம். சரளமாக பேசுவார் . காரணம் கான்வெண்டில் படித்ததால் தான். மற்றபடி அவர்
ஆங்கிலம் தமிழ் இந்தி இலக்கியஙகளிலும் புலமை பெற்றுள்ளார் என்று சொல்வது முட்டாள்
தனமாகும். இங்கே ஜெயலலிதாவிற்கு எல்லாம் தெரியும் என்று அவருக்குத் டாக்டர் பட்டம்
கொடுத்து கௌரவித்தார்கள். போகட்டும். இங்கும் தமிழன் முட்டாளாகிப் போனான.

அன்று தமிழரில் இராமசாமி (திவான்) லட்சுமண சாமி (ராணி எலிசபெத்தின் பிரசவத்திற்கு
அழைக்கப்பட்டுத் தனி விமானத்தில் இங்கிலாந்து சென்றவர்முதலியார்).ஶ்ரீனிவாச
சாஸ்திரிகள் ஆங்கிலப் புலமை பெற்ற( silver tongue Srinivasa sasthiri)போன்றபெரிய மேதைகள்
இருந்தார்கள்... அவர்களை யாரின்று புகழ்கிறார்கள்.இல்லையே !!

அண்ணாத்துரை அந்த காலத்தில் SSLC தாண்ட எத்தனை படையெடுத்தார். எப்படியோ
SSLC தேர்ந்தார். பிறகு B.A. Honours படித்தார் பாஸ் செய்தார் அந்தப்படிப்பைப் படித்தால்
மூன்று வருடம் கழித்து M.A என்று போட்டுக்கொள்ளலாம். அவர் படித்தது ஆங்கில
இலக்கியம் சரித்திரம் மற்றும் அரசியல். இதைத்தவிர வேறு என்ன படித்தார்.. தத்துவம்
சைக்காலஜி சயின்ஸ் ஜியாகர்பி கணக்கு பௌதீகம் இரசாயனம் பயாலஜி மருத்து வம்
பொறியியல் போன்ற வற்றை கற்றுத்த் தேர்ந்தவரா ? இல்லையே !! ஆனாலும் அவரொரு
பேரறிஞர் அண்ணா என்றார்.
மேலே சொன்ன அனைத்துப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று ப்பட்டம் பெற்ற ஒரேத் தமிழன்
லட்சுமணசாமி முதலியார். அவரைப் பற்றி எவனுக்கும் தெரியாது. நாங்கள் எல்லாம் ஆவர்
சென்னைப்பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்தபோது படித்து பட்டம் பெற்றவர்கள்..
என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

அண்ணாத்துரையை அறிஞர் என்றான் பேரறிஞர் என்றான். மற்றவர் யாருமே அறிஞர்
என்று ஒத்துக்கொள்ள மறுக்கும் படிப்பறிவில்லாத படித்தும் அறிவில்லாத தமிழர் இத்தமிழ்
நாட்டில் ஏராளம். இவனுக்கு ஆங்கிலம் ABCD யும் தெரியாது ஆனால் அம்மா என்ன
இங்கிலீஷ் பேசராங்க தெரியுமா. எல்லாரும் முழிக்கிறாங்க என்பான்.

தமிழ் என்பது கடல் இதில் எவ்வளவோ பெரிய மேதைகள் இருக்குமிடம் தெரியாது
இருக்கிறார்கள். வாரியாரை விடத் தமிழ்த் தெரிந்தவன் யாரும் இருக்க வில்லை.
வாரியாருடையத் தம்பியும் தமிழ் இலக்கணத்தில் வல்லுனர். ஆனால் 320 வது ஆளாக
திருக்குறளுக்கு உரையேன் எழுத வேண்டும் . திருக்குறள் கடவுள்வாழ்த்திற்கு உரை
சரியாக எழுதாத கருணாநிதியை முத்தமிழ் வித்தகர் என்பான். சினிமா வசனம் எழ்து
பரெல்லாம் முத்தமிழ் வித்தகரா. அவரே ஒப்புக்கொள்ள மாட்டார் தன்னை யொரு
முத்தமிழ் வித்தகரென்று.. இதெல்லாம் யார் கொடுத்தார். கடைச்சங்கக் கிளையில்
கொடுத்த பட்டமா என்ன.? கருணாநிதி எந்த்தனை வெண்பா கலிப்பா எழுதினார்
காட்ட முடியுமா. முடியவே முடியாது. ஆனால் தமிழின் வித்தகர் என்பார் இருக்கட்டும்.

யாராவது யோகப் பயிற்சிக்கு அப்போதுதான் போயிருப்பார் அவருக்கு உடனே பால யோகி
என்று பட்டம் கொடுப்பர். சித்தரைப் பற்றி இரண்டு வாக்கியம் பேசினால் உடனே அவருடைய
பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் சித்தர் என்ற சொல்லை சேர்த்து விடுவான்
அடைமொழியாகவே. அடைமொழி அனந்தர்களுக்கு இங்குப் பஞ்சமே யில்லை.

இந்தத் தமிழ் நாடு நூறாண்டாய் ஏனோ நல்ல அறிஞரை போற்றி உயர்த்தாதும் கண்டு
கொள்ளாததும் சொத்தை சோடைகளுக்கு தேடித தேடிப்பட்டம் பதவிகளை சன்மானங்கள்
கொடுத்து அவர்களைத் தூக்கி நிறுத்தி தமிழறிஞர்களை மறைத்து விட்டது.. சினிமா
டிராமக்காரன் தான் அறிவாளி என்ற நிலையை இன்று தமிழ் நாட்டில் உண்டாக்கி விட்டார்கள்
இவை என்றும் மாறாது போலும். தமிழினி வளருமா. ???????? பிழைக்குமா?????

நீங்களே சொல்லுங்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (26-Sep-21, 9:03 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே