காதலும் காமமும்

பெண்ணுடல் மேனியில்
என் உடல் தொட்டு

செவ்விதழ் மேல்
ஓர் செல்ல முத்தமிட்டு

விழிகள் இரண்டும்
விண்ணைத் தொட்டு

வலிகள் யாவும்
உந்தன்
வசமாக்கப்பட்டு

மங்கையின் மனதிற்கு முன்னாள் மண்டியிட்டு

ஆணினமாய்ப் பிறந்ததற்கே உண்டான
அர்த்தம் கண்டு

ஆசையுடனும் ஆவலுடனும்

உன்னுடன் மட்டும்
ஓர் காதல் கொண்டு

காலம் முழுவதும்
உந்தன் கண்களில்

காதலின் கைதியாக
நான் வாழ

உந்தன் இதயத்திற்குள்
ஓர் இடம் தருவாயா

எந்தன் காதல் கண்மணியே.....

எழுதியவர் : Ramkumar (4-Oct-21, 7:22 pm)
பார்வை : 245

மேலே