காதல் குற்றவாளியாய்
உனக்கானவள் என்று
வேரொருத்தி வந்துவிட்டால் - நீ என்றும்
என்னவன் என்று
நினைக்கக்கூட இயலாதே...
உன் மீது நான்கொண்ட
காதலின் முடிவுரையால் - உன் பிரிவு
என் மீது நான் கொள்ளும்
வெறுப்பின் முன்னுரையாய்...
உன் மீது தவறில்லை - உன்
அன்பிலும் குற்றமில்லை
இதில்,
நானும், என் காதலும்
மட்டுமே குற்றவாளிகளாய்...