வெள்ளொத்தாழிசை

வெள்ளொத்தாழிசை
=====================
கல்லா லடிபட்ட காயங்கள் மாறலாம்
சொல்லால் மனம்நொந்த சோகங்கள் மாறாதே
நல்லோ ருரைத்ததை நம்பு
**
நில்லாமல் ஓடும் நதியதை நம்பலாம்
இல்லா ததுரைக்கும் எத்தனை நம்பாதே
நல்லோ ருரைத்ததை நம்பு
**
பொல்லா விசங்கொண்ட பாம்பையும் நம்பலாம்
வில்லாய் விழிவீசி வீழ்த்தும்பெண் நம்பாதே
நல்லோ ருரைத்ததை நம்பு
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Oct-21, 1:44 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே