காதல் உயிரே உனக்காக

அதிகாலை சுகமான வேளை அவள்

கனவில் வந்தது

இனியவள் முகம் பார்த்ததும் மனம்

வானில் பறந்தது

அவள் கூந்தல் என்னை லேசாக

வருடி சென்றது

ஈர காற்று என் நெஞ்சை தொட்டது

விடியல் வர வேண்டாம் என்று

மனம் கடவுளை கெஞ்சியது

காதல் தேவதைகள் வாழ்த்து

சொன்னாது

கனவுவே நீ கலையாதே

அவளை என்னிடம் இருந்து

பிரிக்காதே

என்றும் உன் முகம் மாறகாதே

உயிரே உன்னை விட முடியாதே

எழுதியவர் : தாரா (10-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 207

மேலே