உலா

என்னை கடந்திடும் கார்முகிலே
சொல்லிப்போ என் காதல் சேதியை
என்னை தீண்டும் தென்றல் காற்றே
உதிர்த்து போ என் மன்னவன் கதையை
உதடுகள் முணு முணுக்க உன் பெயரே உதிர்கிறது
வானில் தூது போக சொல்லி நிலவிடம் நான் கேட்டிட
மேகத்தில் ஓடி ஒழிந்தது, என்னிடம் விளையாட்டு கட்டிட
நானும் தவித்து போகிறேன், எங்கே நீ
சந்தன தென்றலே சங்கீதம் பாடிப்போ
என்னவன் எங்கே என என்னிடம் சொல்லிப்போ
உலவிடும் மேகமே என் மன்னவன் பெயர் சொல்லிப்போ
தேவதூதனாய் என்னிடம் வந்தாய்
என்னை உன் விழிகளில் ஏந்தி நின்றாய்
இன்று எங்கோ என்னை நீங்கி சென்றாய் எங்கே என் கண்மணியே

எழுதியவர் : ஹேமாவதி (11-Oct-21, 3:02 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : ulaa
பார்வை : 101

மேலே