தன்னம்பிக்கை கவிதை

நீங்களும் சாதிக்கலாம்
----------------------------------------------------
மனம் தளராமை

எடிசனின் மனத்தளராமைத்தான்
மின்விளக்கை கண்டுபிடித்தது
காந்தியின் மனத்தளராமைத்தான்
விடுதலையைப் பெற்றுத் தந்தது
அபிரகாம்லிங்கனின் மனத்தளராமைத்தான்
அமெரிக்காவிற்கு ஜனாதிபதியாக்கியது
அப்துல்கலாமின் மனத்தளராமைத்தான்
அக்னி ஏவுகனையை உருவாக்கியது
அம்பேத்காரின் மனத்தளராமைத்தான்
அடிமைத்தனத்தை ஒழித்தது
நெப்போலியனின் மனத்தளராமைத்தான்
வரலாறு படைத்தது
ஹிட்லரின் மனத்தளராமைத்தான்
சரித்திரம் படைத்தது.

விழும் போதெல்லாம் மனம் தளராதே
விழுந்தால் தான் எழ முடியும் என்று
மனதை வலிமையாக்கிக் கொள்....
தோற்கும் போதெல்லாம் சோர்ந்து விடாதே
தோற்கின்ற அளவுக்கு உன் வெற்றி
உறுதி செய்யப்படுகிறது என்று
தொடர்ந்து முயற்சி செய்!

உதிர்ந்து விட்டது என்பதற்காக
செடிகள் பூக்காமல் இருப்பதில்லை
விழுந்து விட்டது என்பதற்காக
அலைகள் எழாமல் இருல்பதில்லை
கிளைகளை வெட்டி விட்டதால்
மரம் வளராமல் இருப்பதில்லை
அருகில் கொம்பில்லை என்பதற்காக
கொடி வளராமல் இருப்பதில்லை
அறுந்து விழுகிறது என்பதற்காக
சிலந்தி வலைபின்னாமல் இருப்பதில்லை
இது இயற்கையின் மகத்துவம் அல்ல
இயற்கை
மனிதனுக்கு சொல்லும் மகாதத்துவம்...

கொடிய வலியை தாங்கினால்
ஒருபெண் குழந்தையை பெற்றெடுக்கலாம்
மூச்சியை அடைக்கினால்
ஒருவன் முத்தெடுக்கலாம்
மனம் தளராமல் போராடினால்
நீங்களும் சாதிக்கலாம்....!!!!!!

காலை வணக்கம் நண்பர்களே...!

எழுதியவர் : கவிதை ரசிகன் (11-Oct-21, 5:06 pm)
பார்வை : 83

மேலே