போற்றப்பட்டனர்

சிறு குழந்தை ஒன்று
மற்றொரு குழந்தையைக்
கண்டவுடன் சிரிக்கும், மகிழும்
கட்டித் தழுவும்
அதுபோலத்தான் ஆண்டவனும்
அடியார்களும், அன்பைப் பகிர்ந்து
ஆனந்தம் கொள்வர்

அடியார்கள் ஆண்டவனின்
அருளுக்காக ஏங்குவர்,
ஆண்டவனோ அடியார்களின்
அன்புக்கு தவித்து நிற்பான்,
இருவரும் குழ்ந்தைகளாக மாறி
இப்பூவுலகில் அன்பின் பாசத்தால்
ஆட்டம் ஆடுவார்கள்

ஆட்டத்தில் இருவருக்கும்
அளவற்ற பேரானந்தம்
இருவரும் ஒருவரோடு ஒருவர்
ஒன்றி விடுவதால்
ஆண்டவன் பித்தனென
பேரெடுத்தான்—அடியார்கள்
பக்தர்கள் என போற்றப்பட்டனர்

எழுதியவர் : கோ. கணபதி. (5-Nov-21, 10:44 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 40

மேலே