திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் – மூதுரை 29
நேரிசை வெண்பா
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமு மெல்லாம் - திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து
போம்போ தவளொடு போம். 29
– மூதுரை
பொருளுரை:
தழுவிய இனிய உறவினர்களும், மேலான பொருளும், நல்ல அழகும், உயர்வான குலமும் எல்லாம் சீதேவி வந்து சேரும் பொழுது அவளுடனே வந்து சேரும். அவள் நீங்கிப் போகும் பொழுது அவளுடனே நீங்கிப் போகும்.
கருத்து;
சுற்றமும், பொருளும், அழகும், உயர் குலமும் நிலையுடையனவல்ல.