பனைநுங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நீர்வராவி யர்க்குருவை நீக்குமன லாக்குந்தோற்
சார்வா மயஞ்சீதந் தானொழிக்குஞ் - சேர்வார்
விழிக்கரையாந் துள்ளிக்கு மென்சுரத மானே
கழிக்கரையாந் தாளியிளங் காய்

- பதார்த்த குண சிந்தாமணி

நுங்குநீர் வியர்க்குருவை நீக்கும்; பசியைத் தரும்; தோலொடு உள்ள நுங்கு சீத பேதியை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-21, 11:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே