சீரொழுங் கில்லாத செம்மை யிலாப்படைப்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சீரொழுங் கில்லாத செம்மை யிலாப்படைப்பை
வேரொடு கிள்ளியெறி வீணென்று – தாரில்லாச்
சாலையைப் போல்தான் தரமின்றித் தானிருக்கும்
பாலையென்றே சொல்வேன் பரிந்து!

- வ. க. கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-21, 2:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே