நல்லதைச் செய்
நல்லதுக்கு காலமில்லை ராமர்கா லத்துண்மை
நல்லதை சொன்னார் பலருமே -- வில்லன்கள்
பொல்லானேக் கேட்கான் கொலைப்பாத கர்க்குநீ
நல்லதையன் றாடம் பகர்
பூவுலகம் தோன்றியதிலிருந்தே பொல்லாங்கு செய்தல் பொய் சொல்லல் கொலை பாதகம் விபச்சாரம்
திருட்டுத்தனம் இன்னும் பலவகையான கள்ளத்தனமும் இருந்து வருகிறது. சந்ததிகள் தொடர்ந்து
அழிந்தும் புதிதாய் முளைப்பதாலும் அந்த நீதி நூல்களை அன்றாடம் மக்களுக்கு எடுத்துரைப்பது
அவசியமாகிறது.
...