தமிழில் லையா

இலக்கியம் பேசென் றால்நீப் பெரியார்
புகழ்பா டுவதேன் சொல்லு அண்ணா
என்ன தமிழறி . ஞனாக் கூறுமே
தேவா ரம்திரு வாசகம் இலக்கிய
மில்லையா . யார்கைக் கூலிநீ
ஒளிக்கா நீயும் சொல்வாய் எனக்கே


எத்தனை எத்தனை பிரச்சனை நாட்டில்
அத்தனை வேண்டாம் ஒன்றிற் காகிலும்
கவலை தெரிவித் தெரிவித் தாய்நீ
கவிதை யில்தான் நீட் தேர்வை
முப்பது மாநிலம் பாரத நாட்டில்
வேண்டி எழுத கெட்ட திராவிடன்
பாட்டா ளியுடன் அனைவரும் முட்டாள்
மாணவர் குத்துணை போக கண்டிக்
காநின் றாயே யேனாம்
நாடுமுன் னேறநீ செய்தது என்னவோ



இராச இராச னைரவு டியென்றான்
ஆண்டா ளைத் தாசி என்றான்
திருக்குறள் கிருத்துவப் பாதிரி பாலும்
சொல்ல வள்ளுவன் எழுதினான் என்றான்
என்ன எதிர்ப்புக் குரலை எழுப்பினாய்
தமிழ்க்கட வுள்முரு கைபற் றியப்பா
எழுதிய துண்டா வணங்கிய துண்டா
தெலுங்குக் கன்னடன் சொன்ன திராவிடக்
ஏற்று அகத்தியனை மறந்தாய் நீயெதைத்
தான்தமிழ் தொண்டென செய்தாய் இதுவரை
உன்தமிழ்த் தொண்டைப் பட்டியல்
போட்டு யாவர்க் குக்காட் டுவையோ

எழுதியவர் : பழனி ராஜன் (31-Dec-21, 8:00 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 310

மேலே