சுமைதாங்கி
காலையில் கண் விழித்து
ஓடி ஓடி வேலை பார்த்து
ஒவ்வொருவரின்
தேவைகளையும்
பார்த்து பார்த்து
பூர்த்தி செய்துவிட்டு
ஒய்வு எடுக்க
படுக்கைக்கு வருகிறாள்...!!
படுக்கையில் தன் வருகைக்காக
காத்திருக்கும் கணவனுக்கும்
தாம்பத்திய சுகத்தை
கொடுத்து விட்டு
கண் உறக்கம்
கொள்கிறாள் பெண்...!!
ஆனால்
இந்த உலகத்தில்
பெண்களை சுமையாக
நினைப்பவர்கள் பலர்
"சுமைதாங்கி" என்று
நினைப்பவர்கள் சிலரே...!!
--கோவை சுபா