அன்னை 👩‍👦

கவிதை படைக்க முயன்றேன்..
கவிதை கைவசம் இல்லை..
இன்னிசை பாட எழுந்தேன்.
வரிகள் என்னிடம் இல்லை..
மலர்வனம் கண்ணில் கண்டேன்
நாசி யில் வாசம் இல்லை..

தாயின் அன்பில் நின்றேன்
பந்தம் ஏனோ தெரியவில்லை..
சேயின் நிலையில் கண்டேன்
தாயின் அளப்பரிய அன்பை...

அன்னையின் அன்பிற்கு இணை எதுவுமில்லை.. எவருமில்லை..
அன்னையும் இப்போதில்லை...

கோடி கள் இருப்பினும் ஏழையே.... 👩‍👦👩‍👦‍👦👩‍👧👩‍👦‍👦👩‍👦

எழுதியவர் : பொங்க பானை (12-Jan-22, 8:04 am)
சேர்த்தது : பொங்க பானை 🏺
பார்வை : 836

மேலே