வேறொன்றுமில்லை

ஓடிக் கொண்டே இருக்கிறது
காலம்
தேடிக் கொண்டே இருக்கிறோம்
நாமும்
நமக்குத் தேவையானவற்றையும்
அவசியமானவற்றையும்

போதுமென்றோ
இன்னும் எதற்குச் சோதனைகள் என்றோ
தோல்விகள் எதற்கென்றோ
சிந்திக்கக் கூட நேரம் இல்லை

எதில் வெற்றி எதில் சமாதானம் என்று
புரிதல் கிடைக்காத நிலையிலும்
ஓடிக் கொண்டே இருக்கிறது காலம்
மன நிறைவு எதில் கிடைக்கும் என்ற
விடை கிடைக்காத நிலையிலும்.

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (25-Jan-22, 3:39 pm)
சேர்த்தது : rathinamoorthi
Tanglish : verondrumillai
பார்வை : 158

சிறந்த கவிதைகள்

மேலே