கடவுளே நியாயமா
உணவு தரவில்லை
என
ஒருபோதும் சினந்ததில்லை
பசியெனும் பாழும் துயர் கொடுத்தது ஏன் என்றே கொதித்ததுண்டு!
உடை கொடுக்கவில்லை என சினந்ததில்லை;
குளிரொடு வெயில் கொடுத்திட்ட குற்றத்திற்கே முனிந்ததுண்டு!
குடை ஒன்று கொடுக்கவில்லை என சினந்ததில்லை; கொட்டுமழை ஏன் கொடுத்தாய்க் கேட்டதுண்டு!
வீடு ஒன்று
தரவில்லை
என விடைத்ததில்லை;
காரிருளை உறக்கத்தினை படைத்ததினால் கோபமுண்டு !
தக்கத் துணை இல்லையெனும் துக்கமில்லை;
தாரணியில் பேரழகைப் படைத்ததினால் தர்க்கமுண்டு!
உமக்கென்ன இயற்கையெனும் போர்வையினுள் புகுந்து கொள்வாய் ;
இணையோடும் துணையோடும்
இன்பம் கொள்வாய் !
இயலாதோர் யாது செய்வார்?
என்றேனும் எண்ணியதுண்டோ!
-யாதுமறியான்.