எல்லாம் முடிந்து விட்டது

வாழ்க்கையின்...
ஒரே பிடிப்பாய்...
ஒரே ஆதாரமாய்...
நீ இருந்தாய். ஆனால்
நான் கட்டிய அந்தக்
காதல் மாளிகை
கடலுக்குள் மூழ்கிவிட்டது
கண்ணீரின் கடலுக்குள்தான்.
யாரோ சொன்னார்கள்
காதலித்து கல்யாணம் செய்தால்
கருத்தொருமித்து கடைசிவரை வாழலாமென்று
பரீட்சித்துப் பார்த்தேன்.
காதலிக்க மட்டும்தான் தகுதியென
முத்திரை குத்திவிட்டாய்.
வேடிக்கைதான்.
எனக்குத் தோல்வியென்றால்
உனக்கு மட்டும் வெற்றியாகிவிடுமா?
சரி..சரி...
பைத்தியம்போல் உளறுகிறேன்.
வார்த்தைகள் தடுமாறுகின்றன...
வாதங்கள் இங்கே வாடுகின்றன.
என்னுடைய தனித்துவம்
உடைந்து ....உருகுலைந்து போனது.
உடைந்துபோன சிலையை
செப்பனிட நினைத்து - மேலும்
குரூரமாகிக் கொண்டிருக்கிறேன்.
இனிமேல் என்ன இருக்கிறது?
எல்லாம் முடிந்து விட்டது.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (19-Feb-22, 6:12 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 2031

மேலே