காதல் இல்லை என்று சொன்னால்

மனமென்ற ஒன்று மசமச வென யோசிக்கும்,
கண்ணில் பட்டவரையெல்லாம் புடம் போடும்
யாராவது இருவர் பேசிக்கொண்டிருந்தால்
ஓ இது அதுவாவென தீர்மானிக்கும்.

ஸ்கூல் பசங்களாய் இருந்தால் ஏண்டா வென எகத்தாளமிடும்
வாலிப வயசென்றால் எதுல போய் முடியுமோவென எக்காளமிடும்
பெருசுகளாய் இருந்தால் போதும் ம்.ம். என ஏக்கப்பெருமூச்சிடும்
மொத்தத்தில் தனக்கில்லைஎனில் தர்க்கசிந்தனையில் மூழ்கி....!

காதல் இல்லை என்று சொன்னால் அவஸ்தை கூட ஆரோக்கியமில்லை.

எழுதியவர் : செல்வமணி (1-Mar-22, 10:28 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 187

மேலே