வாழ்வை வாழ்

ஆசைகள் போக்கு காட்டும் !

ஆசைப் படாததும் வந்து சில நாள்
ஆனந்தமூட்டும் !!

காதலியே மனைவி ஆவாள் !
இல்லையேல் நீ காதலிக்க,
உன் மனைவியே ஏவாள் !!

தோல்விகள் பயம் காட்டும் !
அதுவே வழிகாட்டி, பின்
வெற்றியின் முகம் காட்டும் !!

வாழ்க்கை ஓர் நாள் சலிப்பூட்டும் !
மாற்றத்துக்கான சமிக்ஞை
என்று புரிந்து கொள் !!

முடிந்த வரை உலகம் சுற்று !
உன் மறு ஜென்மம்
ஈசலாகக் கூட இருக்கலாம் !!

உன் பேர் எழுது, புகழ் சேர் !
அன்பு காட்டு, அறிவைப் பரப்பு !!

கவலையைச் சிறை பிடி !
உன் ரசனை எனும் வீட்டின்
பூட்டைத் திற !!
இயற்கையை வர்ணி,
காதல் கொள், கட்டி அணை !!!

கம்ப்யூட்டர் வேலையாயினும்,
கழனியில் உழவும் கற்றுக் கொள் !!

பட்டம் படி !
அப்பன் தொழிலும் பழகு !!

ராப்பகலாய் உழை,
உறவைப் பற்றியும் நினை !
உடல் நலம் பேணு !!

நட்சத்திரங்கள் எண்ணு !
நடு சாமத் தேநீர் குடி !!

பிடித்ததைச் செய் !
உன் வயிற்று வலிக்கு
பிரியாணி கூட மருந்தாகலாம் !!

சாஸ்திரம் புரிந்து கொள் !
காலத்திற்கேற்ப
வழக்கத்தை மாற்று !!

சவாலை ஏற்றுக் கொள் !
தேவையெனில், மறுத்தும் பேசு !!

புராணம் படி !
தொழில் நுட்பமும் அறி !!

சாகும் வரை வாழ் !
செத்த பின்னும் பேசு !!

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (23-Mar-22, 5:14 pm)
Tanglish : vaazhavai vaal
பார்வை : 207

மேலே