நியாயமா
தீர்க்க வேண்டிய தீர்வுகள்
ஏராளமாய் இங்கிருக்க.....
பார்க்க வேண்டிய உலகங்கள்
என்னைச் சுற்றி நிறைந்திருக்க.....
கிடைக்க வேண்டிய அனுபவங்கள்
ஒவ்வொரு அடியிலும் குவிந்திருக்க..
உன்னை கண்ட நாளாய்
எல்லாவற்றையும் நானும் தொலைத்திருக்க....
என்னடி இது...?
என்ன மாயமடி இது....?
என்னை மறந்து...
என் நிதானம் இழந்து.....
உன்னைச் சுற்றியே
என்னைச் சுற்றவிட்டு
விட்டாயே நியாயமா....?
தீர்வுகள்.....
உலகங்கள்......
அனுபவங்கள்.....
அத்தனையும் உன்னுள்ளேயா?