பிறநெறி போக்கிற்பவர் பெருநட்பாளர் – அறநெறிச்சாரம் 94
நேரிசை வெண்பா
நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
பட்டாம் பலபிறப்புத் துன்பமென்(று) - ஒட்டி
அறநெறி கைவிடா(து) ஆசாரங் காட்டிப்
பிறநெறி போக்கிற் பவர் 94
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
ஆராயுமிடத்து நட்பினரெனப்படுதற்குரியார் பூமியில் பல பிறவிகளால் துன்பம் அடைந்தோம் என்று சொல்லி துணிந்து அறநெறியினைச் சோரவிடாது, ஒழுக்கத்தினையுணர்த்தி தீநெறியினின்றும் நீக்குபவரே யாவர்.