வெள்ளல்லி, செவ்வல்லி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மிதுனவல்லி வித்துகளால் விந்துண்டென் றாலும்
மதனமரைக் குச்செ(ம்)மைக்கா ரக்க - மதனமிந்தப்
பேதமின்றி யீரற்குப் பீலிங்க ளுக்குவன்மை
யேதமின்றிச் செய்யுமிரண் டும்
- பதார்த்த குண சிந்தாமணி
இருவித அல்லி விதைகளுக்குச் சுக்கில விருத்தியுண்டாகும் என்பர்; ஆனால் வெள்ளல்லிக்குச் சுக்கிலமும் செவ்வல்லிக்குச் சோணிதமும் அதிகமாகும்; ஈரலுக்கும், பீலிக கண்டங்களுக்கும் இரண்டும் பயன்தரும்