வெள்ளல்லி, செவ்வல்லி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மிதுனவல்லி வித்துகளால் விந்துண்டென் றாலும்
மதனமரைக் குச்செ(ம்)மைக்கா ரக்க - மதனமிந்தப்
பேதமின்றி யீரற்குப் பீலிங்க ளுக்குவன்மை
யேதமின்றிச் செய்யுமிரண் டும்

- பதார்த்த குண சிந்தாமணி

இருவித அல்லி விதைகளுக்குச் சுக்கில விருத்தியுண்டாகும் என்பர்; ஆனால் வெள்ளல்லிக்குச் சுக்கிலமும் செவ்வல்லிக்குச் சோணிதமும் அதிகமாகும்; ஈரலுக்கும், பீலிக கண்டங்களுக்கும் இரண்டும் பயன்தரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Apr-22, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே