இடை

ஐந்து அங்குலம்
இடையே காட்டி
ஆளை மயக்கும்
வஞ்சியவள்..!!

பார்த்துப் பத்து
வினாடியில் பஞ்சாய்
போகும் நெஞ்சு
இவனது..!!

தங்கமாக நான் இருந்தாலும்
என்னை உருக்கும்
பாதரசம் அவள்
இரு 12 வயது கொண்டவள்..!!

கருஞ்சூரியன் அகிலம்
முழுதும் சுற்றி வந்தாலும்
என்னை அடைக்காக்கும்
வெள்ளிநிலா அவள்..!!

மருதாணிப் பூவே
மரிக்கொழுந்து வாசம் அடி
உந்தன் கூந்தல்
மன்னவனாக நான் மட்டும்
உன்னை ஆள வேண்டும்..!!

அவள் அதிகாரத்தில்
அழிந்தே தினம் தினம்
உயிர் பிழைக்கிறேன்
என்னவள் என்னை ஏற்றால்
என்ற நம்பிக்கையோடு நான்..!!

எழுதியவர் : (21-Apr-22, 8:13 pm)
பார்வை : 62

மேலே