நடுநின்று உலக நயனிலா மாந்தர் - அறநெறிச்சாரம் 102

நேரிசை வெண்பா
(‘ன்’ ‘ம்’ ‘ந்’ மெல்லின எதுகை)

தன்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின்
செம்புண் வறுத்த வறைதின்பர் - அந்தோ!
நடுநின்(று) உலக நயனிலா மாந்தர்
வடுவன்றோ செய்யும் வழக்கு 102

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

தமக்கொரு புண்வரின் உலகத்தவர் அதனை நன்றாகக் கழுவி மருந்திட்டு ஆற்றுவர்; ஆனால் அவர்கள் மற்றொன்றினுடைய சிவந்த புண்ணாகிய இறைச்சி வறுத்த வறுவலை விரும்பி உண்பர். ஐயகோ! நடுநிலையாக நின்று உலக நீதியை உணராத மனிதர் செய்யும் முறைமை குற்றமேயாகும்!

குறிப்பு: வறை – வறுவல், நயன் – நயம், நீதி:

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-22, 3:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே