இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும் நடுக்கமும் நன்மகிழ்வு மில் – அறநெறிச்சாரம் 105

நேரிசை வெண்பா

கல்லான் கடைசிதையும் காமுகன் கண்காணான்
புல்லான் பொருள்பெறலே பொச்சாக்கும் - நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும்
நடுக்கமும் நன்மகிழ்வு மில் 105

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

கல்லாதவன் கடையனாய் அழிவான், காமுற்ற ஒருவன் கண் தெரியாதவனாவான்,

அற்பன் பொருள் பெற்ற அளவிலேயே தன் நிலையை மறந்து ஒழுகுவான்,

அறிவுடையவன் இடுக்கணும் இன்பமும் எய்தியக்கண்ணும் துன்பமுற்றவிடத்து வருந்துதலும் இன்பமுற்றவிடத்து மகிழ்தலும் இலனாவன்.

குறிப்பு:

காமுகன் கண்காணானாதலாவது காம மயக்கத்தால் தான் சேர்தற்குரிய மகளிர் இவரெனவும் சேரத் தகாதார் இவரெனவும் அறியானாய் ஒழுகுதல்.

''காமத்துக்குக் கண்ணில்லை'' என்பது பழமொழி. அன்றி, அக் கெட்ட வொழுக்கத்தால் உடனிலை கெட்டுக் கண்பார்வையினை இழப்பான் எனலுமாம்.

கடை- கடையன்; இழிந்தவன்: குணவாகுபெயர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-May-22, 3:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே