மானம் அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை பழியாமல் வாழுந் திறம் – அறநெறிச்சாரம் 106
நேரிசை வெண்பா
தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும் - மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழுந் திறம் 106
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
வறியோரை நாடி அவர்க்கு வேண்டுவன உதவுதலைக் காட்டினுஞ் சிறந்த அறமும், பெரியோர்க்கு அறிவைக் காட்டிலும் சிறந்த ஆராயுந் துணைவனும் பெருமை கெடாத ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த நல்லொழுக்கமும் இல்லை; இம்மூன்றும் பிறர் பழியாமல் வாழ்வதற்கேற்ற செயல்களாகும்.
குறிப்பு: உசாவுதல் - கேட்டறிதல்,