செம்மறியாட்டுத் தயிர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செம்மறியின் றன்றயிரைத் தின்ன மதுரமிகுங்
கொம்மைமுலை மாதரசே கூறக்கேள்! – அம்ம!
கரப்பான் சொறியுங் கடுப்பிரத்த வாய்வும்
உரப்பர் முடல்கெடுமென்(று) ஓது

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் கரப்பான், சொறி, மூலக்கடுப்பு, ரத்தமூலம், வாத நோய் இவை பலப்படும்; உடலுக்குத் துன்பந் தரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-22, 8:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே