கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீர் 555
![](https://eluthu.com/images/loading.gif)
***கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீர் 555 ***
உயிரானவளே...
என்னோடு
நீ சண்டையிட்டு...
வார்த்தையின்றி
சென்ற சில நிமிடங்களில்...
உன் இதழ்கள் விதும்ப
கண்கள் ஈரமாக...
உன் கன்னத்தில்
கண்ணீரின் சுவடு...
காரணமின்றி நீ என்னோடு
கோபம் கொண்ட...
காரணம்தான்
எனக்கு தெரியவில்லை...
காரணம்
சொல்லிவிட்டு போ...
என்னை நான்
மாற்றி கொள்கிறேன்...
நிலவில்லா வானத்தை
ரசிக்க தோன்றாது...
நீ இல்லாத நாட்களும்
அதுபோலவே செல்கிறது...
உன்னை காணவே என்
கண்கள் காத்திருக்கிறது...
எந்தளவுக்கு
உன்னை காதலிக்கிறேன்...
உனக்கு
நிச்சயம் தெரியாது...
எனக்கு நீ வலியை
கொடுத்தாலும்...
என் காதல் என்றும்
உன்னை வெறுக்காது...
என் வலியை உணர
உன் செவிகொடு ...
அருகில் வந்து அது போதும்
என் காதல் ரோஜாவே.....
***முதல்பூ.பெ.மணி.....***