பூசிப் பொதிந்த புலாலுடம்பு ஊசல் கயிறற்றாற் போலக் கிடக்குமே – அறநெறிச்சாரம் 113

நேரிசை வெண்பா

ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி
பூசிப் பொதிந்த புலாலுடம்பு - ஊசல்
கயிறற்றாற் போலக் கிடக்குமே கூற்றத்(து)
எயிறுற்(று) இடைமுரிந்தக் கால் 113

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

பொருள்கள்மேல் வேட்கையையும் உற்றார்பால் தளைப்பட்ட அன்பையும், மனைவிபால் வைத்த காதலையும் உள்ளே அடக்கி, தசையால் கட்டிய புலால் நாற்றம் வீசும் உடம்பானது,

எமனது பல்லில் சிக்கி அழிந்திடும் போது, கயிறறுந்த ஊஞ்சலே போல அது செயலற்று வீழ்ந்து கிடக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-22, 9:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே