அவள்

துறவறம் நாடி கானகம் நோக்கி போனான்
வழியில் நதிக்கு கரையில் குளித்துவிட்டு
கட்டுக்கடங்கா கார்முகில் கூந்தலை
கோதி உலர்த்தி பின்னிக் கொண்டையிடும்
எழிலே உருவாய் அவளைக் கண்டான்
தன்னை மறந்தான் துறவையும் பின்னே
அவளை நாடி அவள் பின்னே அவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jun-22, 2:21 pm)
Tanglish : aval
பார்வை : 164

மேலே