இதயத்தைக் கீறிய இரத்த பாசம்

இரத்த பாசம்; இதில் என்ன வேசம் .
இதயத்தில் வடியிது நேசம்,
இன்னும் என்ன தோசம்;
பணம் பார்த்து வாராத பாசம்,
பகையில் என்ன ரோசம் ;
ரணமாகுது மனசும்.

இரத்தத்தால் வந்த உறவு;
அரக்கத்தனம் ஏன் இந்த உறவில்;
பிறப்பால் வந்த உறவு;
பிடிவாதம் பிடித்தால் பிழையாகிடும் உறவு;
பிடித்தே வந்த உறவு, நடிக்கத்தெரியாத உறவு;
இரக்கம் இல்லாமல் பேசினால் பிரிவு;

இரத்த பாசம் இது;
விற்க முடியாத பாசம்;
விரட்டினால் போகாத பாசம்;
விலை பேச முடியாத பாசம்;
விறகினால் எரிக்க முடியாத பாசம்;
பரிவான பாசம்; பணிவான பாசம்;
பயம் அறியாத பாசம்; பிரிக்க முடியாத பாசம்;
பிடிவாதத்தில் இல்லை வேஷம்;
புரிந்தால்போதும்;
போதும் போம் என்று சொல்லாத பாசம்
பொங்கி வரும் அன்பு நேசம்;
`
ரத்த தானம் இல்லை; இரத்த பாசத்தை பகிர;
இதயத்தைக் கீறினால் ஓடும் ஆண்டவன் தந்த அன்பின் பாசம்;
நடிக்கத் தெரியாத உறவு;
நகமும் சதையினாம உறவு;
நாளும் உடன் வரும் உறவு;
உயிர் பெற்ற கருப்பையும் ஒன்று;
தமக்கையோ, தம்பியோ, அண்ணனோ, தங்கையோ;
தங்கி வந்த கருவறை ஒன்று;
தாங்கிய கரங்களும் ஒன்று;
தாய்தந்த பாலும் ஒன்று;
தாலாட்டிய மடியும் ஒன்று;
சினந்தது ஏன் ! சீற்றமும் ஏன்!
ஒட்டு மொத்தமாய் வெறுப்பதேன்;

மரபு அணுக்கள் ஒன்றாகியும் மறந்தது ஏன்;
காலம் விளையாடியதோ!
காசுபணம் தான் கண்ணை மூடியதோ!
ஒரு மரத்துப் பூக்கள் நாம்,
ஒன்றாய் உண்ட உறவு உதறிப் போனது ஏன்?
சிதறியது மனசு; பதறுது உடம்பு;

இரத்த பாசம்!
ஒரு கண்வடித்த கண்ணீரை மறுகண்ணும் தாங்குவதேன்!
அடித்து விளையாடிய சிறுபிராயம்,
அள்ளி பிடுங்கித் தின்ற பிராயம் அன்று;
அடித்துக் கொண்டு பிரிந்துபோக துடிக்கும் பிராயம் இன்று,
இரத்த பாசம்!
சிறு துரும்பு பட்டாலும், சீறிவந்தாய் அன்று,
செத்தே இன்று விழுந்தாலும் சினந்து போகின்றாய்;
சொத்தே பெரிதென்று நினைக்கும் காலம் இது;
சோடை போன பாசம் இன்று;
பணத்துக்குப் பின்னால் பதுங்குது இரத்தபாசம்;
பகல் வேசம் போடுகின்றாய்;
அன்பில் ஆதாயம் தேடுது இந்த பாசம்;
அவமானத்திற்கும் இ அவலத்திற்கும் விலைபோகுது இன்று;
ஆணவம் பிடித்தே திரியிது;

இரத்த பாசம்! ஒரே வீட்டில்,ஒரே படுக்கை,
ஒரே போர்வை,ஒன்றாய் மலர்ந்த பாசம் ,
ஒரே ஓட்டம், ஒரே ஆட்டம்,
ஒட்டு மொத்தமாய் போனது,
ஓலம் இடத்துவங்குது,

உறவும் பாழாகிப்போனது;
உணர்வுகளும் மாறிப்போனது;
பாசமாய் பேசிய வாயிது;
பசப்பிதான் பார்க்குது .
நாசமாய் போக என்றே சபிக்குது;
விடம் தோய்ந்த சொற்கள் மோதுது;
வேண்டாத செயல்களை செய்யிது;
விரக்தியானாலும்,
விட்டு போகாத இரத்தபாசம் இது;
விழுந்தால் அத்து ஓடும் உடல் இது,
விதண்டாவாதம் எதற்கு;
பாசத்தில் என்ன பசப்பிது.
பழிதீர்க்க துடித்தாலும்;
பதரித்துடிக்கும்; பிரியாத பிரிக்கமுடியாத
இரத்த பாசமிது;
பிடிவாதம் தான் பிடிக்கிது.

அ.முத்துவேழப்பன்;

எழுதியவர் : அ.முத்துவேழப்பன்; (13-Jun-22, 6:56 am)
பார்வை : 505

மேலே