என்கோபம் அவர்க்கு வேதனை

நேரிசை வெண்பா

என்னூடல் தாக்கிய நோயை யவரிடம்
என்கண்ணும் காண விழையுமாம் -- ஒண்டா
தவிர்க்கவரை நீயும் தழுவாதே நிற்க
தவிக்கும் நிலைநேரில் காண்



நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம்
பார்க்கலாம்; அவரின் துன்பம் பார்க்க நீ அவரைத் தழுவாதே; ஊடல் செய்

காமத்துப்பால். குறள் 1/23 வதுப்பாடல்


...........

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jun-22, 12:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 279

மேலே