புன்தோலால் வேய்ந்த புலால்வாய்க் குரம்பையை இன்புறுவர் ஏழை யவர் – அறநெறிச்சாரம் 124

நேரிசை வெண்பா

நெடுந்தூண் இருகாலாய் நீண்முதுகு தண்டாய்க்
கொடுங்கோல் விலாவென்பு கோலி - உடங்கியநற்
புன்தோலால் வேய்ந்த புலால்வாய்க் குரம்பையை
இன்புறுவர் ஏழை யவர் 124

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

இரண்டு கால்களையும் நெடிய தூண்களாகவும் ஊன்றி, நீண்ட முதுகெலும்பைச் சட்டமாக இட்டு,

விலா எலும்புகளைக் கொடுங்கைகளாக வளைத்து அவை கூடி நிற்றற்கு நல்ல மிருதுவான தோலால் மூடின இறைச்சி மயமான உடலாகிய சிறிய மனையை அறிவில்லாதவர்கள் பார்த்துப் பார்த்து மகிழ்வார்கள்.

குறிப்பு: குரம்பை – குடில், சிறு வீடு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-22, 7:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே