புன்தோலால் வேய்ந்த புலால்வாய்க் குரம்பையை இன்புறுவர் ஏழை யவர் – அறநெறிச்சாரம் 124
நேரிசை வெண்பா
நெடுந்தூண் இருகாலாய் நீண்முதுகு தண்டாய்க்
கொடுங்கோல் விலாவென்பு கோலி - உடங்கியநற்
புன்தோலால் வேய்ந்த புலால்வாய்க் குரம்பையை
இன்புறுவர் ஏழை யவர் 124
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
இரண்டு கால்களையும் நெடிய தூண்களாகவும் ஊன்றி, நீண்ட முதுகெலும்பைச் சட்டமாக இட்டு,
விலா எலும்புகளைக் கொடுங்கைகளாக வளைத்து அவை கூடி நிற்றற்கு நல்ல மிருதுவான தோலால் மூடின இறைச்சி மயமான உடலாகிய சிறிய மனையை அறிவில்லாதவர்கள் பார்த்துப் பார்த்து மகிழ்வார்கள்.
குறிப்பு: குரம்பை – குடில், சிறு வீடு.