எல்லாம் கொஞ்ச காலம்தான்

துரோகங்கள் நடுவே துரவியாய் இருந்தும்
துயரங்கள் வந்து துரத்துவது ஏனோ...

துன்பங்கள் கடந்தால் இன்பம்தான் என்னும்
நம்பிக்கையும் ஓர் ஆசைதானோ...

ஆசையை கடக்கும் விசையை நோக்கி பயணப்படும் நானும்
உடன் பயணிப்பருக்கு பாதுகாவலன் அல்லேன்,
இது புலப்பட்டும் புரியாமல் வருந்துவது வீனோ...

வந்த தூரம் சிலவே
இன்னும் போகனும் பலவே
இழப்பிற்கு ஈடு தேடி இருப்பதை விடவோ....

துணை தேடி தொலையாமல்,
உறவுக்காக உருகாகமல்,
உன் உடம்புமே உண்மையில்லை,
உன்னை தவிர இங்கு உனக்கு எதுவும் இல்லை
என உரக்க சொல்வதே சிவமோ...

தடுமாறும் நேரம்
தடைமாரும் காலம்

எல்லாம் கொஞ்ச காலம்தான்...
இதுவும் கடந்து போகும்...

எழுதியவர் : காவேரி நாதன் (29-Jun-22, 12:24 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 91

மேலே