காதல் கண்ணீரின் மழையில் நான் 555

***காதல் கண்ணீரின் மழையில் நான் 555 ***


உயிரானவளே...


என் இதயத்திற்கு
நீ கொடுத்த வலி...

உன் இதயம்
என்றும் சந்திக்கக்கூடாது...

சந்திக்குமானால்
துடிப்பதையே
நிறுத்திவிடும்...

நீ மட்டும் எப்படி வலிகளை
கொடுத்துவிட்டு சுகமாக இருக்கிறாய்...

அன்று உன் நினைவின்
கனவில் மிதந்தேன்...

இன்றுதான் உணர்கிறேன் நான்
மிதந்தது கான
ல் நீரில் என்று...

என் விழிகளின் மொழிகளை
பார்த்தே புரிந்து கொண்டவள் நீ...

என்
இதயமொழிகளை
உணராதது ஏனோ...

உன்னிடம்
விடை பெறாத காதலால்...

முற்று பெற்று
நிற்கிறது என் காதல்...

காதல் மழையில் நனைந்த
நான் கண்ணீர் மழையில்...

நா
ன்
வேலிபோட்டு அடைகாத்தேன்...

இன்னொரு இதயம்
என்னை நெருங்கிவிடாமல்...

நீ எளிதாக விடைகொடுப்பாய்
என்று தெரியவில்லை...

உன் நெஞ்சோடு நெருங்கி
காற்றோடு கல
ந்து...

உன் மூச்சில்
சேர்வதர்க்காக காத்திருக்கிறேன்...

வீதியெங்கும்
பூ ஊர்வலத்தில்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (26-Jul-22, 8:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 208

மேலே