அலைவிற் புலன்களில் நிற்பினும் பொச்சாப் பிலரே மலங்கடி வாளா தவர்க்கு – அறநெறிச்சாரம் 148

நேரிசை வெண்பா

அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண் நீர்நிலா தாகும் - அலைவிற்
புலன்களில் நிற்பினும் பொச்சாப் பிலரே
மலங்கடி வாளா தவர்க்கு 148

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

அலைகளையுடைய நீரின் கண்ணே நின்றாலும் தாமரையிலையிடத்து நீர் ஒட்டி நில்லாது;

அதுபோல, சஞ்சலத்தைத் தருகின்ற பஞ்சேந்திரியங்களோடு கூடியிருந்தாலும் முனிவர்களை அழிவினைத் தருகின்ற ஆசை வெகுளி முதலியவை அடிமைகொள்ளாது; அவர்களும் மறதியால் அவற்றின் வயப்படுதலும் இலர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-22, 1:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே