புதிய காக்கா - நரி கதை குட்டி கவிதை

மரத்தில் வந்து அமர்ந்த காக்கையின்
வாயில் வடையைக் கண்ட குள்ளநரி
' எத்தனை அழகு காக்கைநீ உன்குரலோ
குயிலினும் இனிமை' என்று கூறி
காக்கை கூவுமா வடை விழுமா
திங்கலாம் என்று காக்க காக்கையோ
வடையை முழுவதும் தின்று கூறியது
நரியாரே நான்தான் போனஜென்மத்துக்
குரங்கு என்னை ஏமாற்றப் பார்த்த
முதலையல்லவோ இப்பிறவியில் நீ
தொடர்ந்து என்னை ஏமாற்ற வந்த
குள்ள நரி யாரே என்று கூறி
பறந்து போனது எங்கோ .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Aug-22, 11:05 am)
பார்வை : 39

மேலே