தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால் தானே தனக்குக் கரி – அறநெறிச்சாரம் 151

இன்னிசை வெண்பா

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி 151

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பினனும் தானேயாவான், பிறரன்று;

தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்துகொள்பவனும் தானே,

தான்செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால் தான்செய்த வினைகளுக்குச் சான்றாவானும் தானேயாவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-22, 10:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே